இந்தூரில் கால் சென்டரிலிருந்து பேசி அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தவர்கள் 21 பேரை சைபர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசம் இந்தூர் லாசுடியா பகுதியில் உள்ள கால் சென்டரிலிருந்து ஒரு கும்பல் அமெரிக்க குடிமக்களிடம் பேசி பணத்தை ஏமாற்றி வந்துள்ளனர். இதனை தகவலறிந்த இந்தூர் சைபர் காவல்துறையினர் சந்தேகப்படும் இடத்தில சோதனை நடத்தினர். இதில், அமெரிக்க குடிமக்களை கால் சென்டரில் இருந்து அழைத்து பணத்தை ஏமாறியது தெரியவந்தது. உடனே அங்கிருந்த 21 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கும்பலில் சேர இரண்டு வருட ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர், அமெரிக்க குடிமக்களிடம் பேச வைத்துள்ளார். சில குற்றவாளிகள் மும்பை மற்றும் இந்தூரைச் சேர்ந்தவர்கள். இந்த கும்பல் மாதத்திற்கு சுமார் ரூ .1.5 கோடி சம்பாதித்து வருவதாகவும், கடந்த 1.5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.